6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

New Project (66)

வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாகத் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று 6 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ‘ஆரஞ்சு அலர்ட்’ எச்சரிக்கையைச் சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆரஞ்சு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

மலைப்பகுதிகள் மற்றும் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், மாவட்ட நிர்வாகங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *