அரசுப் பள்ளிகளில் 2,000 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை!

New Project (67)

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதன் முதற்கட்டமாக, ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களை நியமிக்கப் பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

தற்போது மாநிலம் முழுவதும் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், காலியிடங்களை நிரந்தரமாக நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, இந்த 2,000 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை வரும் நவம்பர் மாதத்தில் நடத்த டிஆர்பி திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *