காவிரி நீரைத் திறக்க வேண்டும்: தவெக அரசு அதிரடி முடிவு!

New Project (39)

காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டுவதில் தவெக அரசு மிகவும் உறுதியாக இருக்கும் என நீர்வளத்துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார். வரும் 3-ஆம் தேதி கர்நாடகாவில் நடைபெறவுள்ள அம்மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் நேரடியாகப் பங்கேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த முக்கியக் கூட்டத்தில், காவிரி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தின்படி தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய உரிய தண்ணீரை உடனடியாகக் காவிரியில் திறந்து விட வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் அவர்கள் அம்மாநில அரசிடம் வலுவாக வலியுறுத்துவார் என அமைச்சர் தெரிவித்துள்ளார். குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்கு நீர் தேவையாக உள்ள நிலையில், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதே அரசின் முதன்மை இலக்கு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், கர்நாடக அரசு தன்னிச்சையாக மேகதாதுவில் புதிய அணை கட்ட எடுக்கும் முயற்சிகளைத் தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று அமைச்சர் வினோத் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார். காவிரி ஆற்றுப் படுகையில் மேகதாது அணை கட்டுவது தமிழகத்தின் உரிமையைப் பறிக்கும் செயல் என்றும், நம் மாநிலத்தின் நதிநீர் உரிமைகளை எந்தச் சூழலிலும் விட்டுக்கொடுக்காமல் சட்டப் போராட்டங்கள் மூலமும் அரசியல் அழுத்தங்கள் மூலமும் அரசு உறுதியாகத் தடுத்து நிறுத்தும் என்றும் அவர் தனது பேட்டியில் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *