இந்தியாவில் முதல் டெங்கு தடுப்பூசிக்கு அனுமதி!

New Project (23)

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் பாதிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மருத்துவத் துறையில் ஒரு மிகப்பெரிய மைல்கல் சாதனை எட்டப்பட்டுள்ளது. ‘தகேடா பயோபார்மாசூட்டிகல்ஸ்’ (Takeda Biopharmaceuticals) நிறுவனத்தின் ‘கியூடெங்கா’ (QDENGA) என்ற டெங்கு தடுப்பூசிக்கு, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான DCGI (Drug Controller General of India) அதிகாரப்பூர்வமாகச் சந்தைப்படுத்தல் அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியாவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அனுமதி பெறப்பட்டுள்ள மிக முதல் டெங்கு தடுப்பூசியாக இந்த ‘QDENGA’ கருதப்படுகிறது. கொசுக்கள் மூலம் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், இந்த தடுப்பூசியின் அறிமுகம் ஒரு மிக முக்கியமான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.

4 வயது முதல் 60 வயது வரையிலான நபர்களுக்கு இந்த தடுப்பூசியைச் செலுத்தலாம் என்றும், இந்த தடுப்பூசி எப்போது முதல் பொதுமக்களுக்குக் கிடைக்கும், யாருக்கு எவ்வாறு வழங்கப்படும் என்பது தொடர்பான விரிவான வழிகாட்டுதல்கள் மற்றும் வழிமுறைகளைச் சுகாதாரத் துறை அதிகாரிகள் விரைவில் வெளியிட உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *