வாசகர்களுக்கு நற்செய்தி | சென்னை புத்தகக் காட்சிக்கு அனுமதி இலவசம் !

New Project (6)

புத்தகப் பிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் 49-வது சென்னை புத்தகக் காட்சிக்கு வரும் வாசகர்களுக்கு இந்த ஆண்டு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. (YMCA) மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த மாபெரும் புத்தகத் திருவிழாவை, நாளை மறுநாள் (ஜனவரி 8, 2026) மாலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முறைப்படி தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் மற்றும் இலக்கிய ஆளுமைகள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

சிறப்பம்சங்கள்:

  • 1000 அரங்குகள்: இந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத வகையில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட புத்தகக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
  • சர்வதேசப் பங்கேற்பு: சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் பதிப்பகங்களும் இதில் பங்கேற்கின்றன.
  • கலைஞர் பொற்கிழி விருதுகள்: தொடக்க விழாவின் போது சிறந்த எழுத்தாளர்களுக்கு ‘முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருதுகள்’ மற்றும் தலா ரூ. 1 லட்சம் ரொக்கப்பரிசு முதலமைச்சரால் வழங்கப்படும்.
  • நேரம்: ஜனவரி 8 முதல் 21-ஆம் தேதி வரை தினமும் காலை 11:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை பொதுமக்கள் இந்த கண்காட்சியைப் பார்வையிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

什么茶叶好. 專業 it方案 ,提供全面的技術解決方案 | tech computer company. The future of smart homes.