ஏ.வி.எம். சரவணன் மறைவு: நடிகர்கள் சிவக்குமார், சூர்யா அஞ்சலி

New Project (22)

மூத்த திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் இன்று காலையில் காலமானார்; அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ஏ.வி.எம். ஸ்டூடியோவில் வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை வயது மூப்பின் காரணமாக மூத்த திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் காலமானார்.

அவரது உடல் சென்னை வடபழனியில் அமைந்துள்ள ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதன் போது நடிகர்கள் சிவக்குமார் மற்றும் சூர்யா நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஊடகங்களிடம் பேசிய நடிகர் சிவக்குமார், “என் இயற்பெயர் பழனிசாமி.

அதனை ‘சிவக்குமார்’ என மாற்றித் தந்தவர் சரவணன் சார். அவரைப் பெருமைப்படுத்தும் வகையில் என் மகனுக்கு நான் ‘சரவணன்’ எனப் பெயர் வைத்தேன்” என நினைவுகூர்ந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

乌龙茶. ip cam 解決方案. The future is now : top 10 technologies shaping 2025 » tech news today.