ரூ.10.5 கோடியில் ‘Gateway of Chennai’

சென்னைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு மறக்க முடியாத மற்றும் வரவேற்பு அளிக்கும் வகையிலான அழகிய அனுபவத்தைத் தரும் நோக்கில், சென்னை மாநகராட்சி சார்பில் “Gateway of Chennai” என்ற பிரம்மாண்ட உள்கட்டமைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்தச் சிறப்புத் திட்டத்தின் கீழ், சென்னை விமான நிலையம் முதல் கத்திப்பாரா வரை சுமார் 4.8 கிலோமீட்டர் தூரத்திற்குச் சாலை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் முற்றிலும் அழகுபடுத்தப்பட உள்ளன. இத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.10.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நகரத்தின் பிரதான நுழைவுப் பகுதியாக விளங்கும் இந்தச் சாலையில் அதிநவீன விளக்குகள், கண்கவர் இயற்கை பூங்காக்கள், கலைநயமிக்க சுவரோவியங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. சென்னைக்குள் நுழையும் போதே சர்வதேசத் தரத்திலான அழகிய தோற்றத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இத்திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
