சென்னையுடன் சேர்த்து 6 மாவட்டங்கள் | மீண்டும் ஆரஞ்சு அலர்ட்!

rain

இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கு மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கடலூர், அரியலூர், சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

நாளை (டிசம்பர் 4) கிருஷ்ணகிரி, தருமபுரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு கூறுகிறது.

வலுவிழந்து குறைந்துள்ள டிட்வா புயல் தாக்கத்தின் காரணமாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்துவரும் கனமழை இன்று இரவுக்குள் குறையும் என சுயாதீன வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

茶叶. ip cam 解決方案. So, are smart homes making us safer or more vulnerable ? the answer isn’t black and white.