தமிழகத்தில் இந்த ஆண்டு வெயில் சதை போடும்! மார்ச் முதல் அக்டோபர் வரை கோடை தாண்டவம் – வானிலை எச்சரிக்கை!

New Project (96)

தமிழகத்தில் மார்ச் முதல் வாரத்திலேயே கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில், கடந்த ஆண்டை விட வெயிலின் தாக்கம் அதிகரித்து அக்டோபர் வரை வெப்பம் நீடிக்கும் என வானிலை ஆய்வாளர் எச்சரித்துள்ளார்!

தமிழகத்தில் இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நிலவிய கடும் பனிப்பொழிவு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பனிக் காலம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அடுத்து நம்மை வாட்டி வதைக்கப் போகும் கோடை காலம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மார்ச் முதல் தொடங்கும் அக்னி நட்சத்திர ஆட்டம்: தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தகவலின்படி, வரும் மார்ச் முதல் வாரத்திலேயே கோடை காலம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது. இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் கடந்த ஆண்டை விட மிகக் கடுமையாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அக்டோபர் மாதம் வரை வெயிலின் தாக்கம் நீடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

வெப்பநிலை எப்படி இருக்கும்? மார்ச் முதல் மே வரையிலான 12 வார கால கோடை காலத்தில்:

4 முதல் 6 வாரங்கள்: மிகக் கடுமையான வெப்பம் மற்றும் வறண்ட வானிலை நிலவும்.

3 முதல் 4 வாரங்கள்: வெப்பநிலை இயல்பான அளவில் இருக்கும்.

2 வாரங்கள்: வெப்பசலனம் காரணமாக இடி கலந்த மழைக்கு வாய்ப்புள்ளது.

இதில் நிம்மதி தரும் விஷயமாக, வெப்பசலன மழை மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் வரும் கோடை காலத்தை எதிர்கொள்ள இப்போதே தயாராக வேண்டியது அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Ip cam 視訊監控 | cctv 閉路電視 解決方案 | tech computer. ?்?. og vi vil aldri komprimere en stabilitetsprotokoll fordi en lanseringsdato ble lovet før vitenskapen var ferdigstilt.