ஜப்பானில் ஊழியர்களுக்கு டி-சர்ட், அரைக்கால் ட்ரவ்சர் ஆடை விதி!

ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் கோடைகாலம் தொடங்கி வெயில் உச்சத்தைத் தொட்டுள்ளது. அங்கு தற்சமயம் வெயில் 35 டிகிரி செல்சியஸைக் கடந்து கொளுத்தி வருகிறது. இதனால் அரசு ஊழியர்கள் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பித்து, எளிதாகப் பணியாற்றும் நோக்கில் டோக்கியோ மாகாண அரசு ஒரு அதிரடி ஆடை விதியை அறிமுகம் செய்துள்ளது.
‘டோக்கியோ கூல் பிஸ்’ (Tokyo Cool Biz) என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், ஊழியர்கள் தங்களின் வழக்கமான அலுவல் உடைகளான கோட் மற்றும் டை போன்ற ஆடைகளைத் தவிர்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக அவர்கள் டி-சர்ட், வசதியான அரைக்கால் ட்ரவ்சர் (Trousers) மற்றும் ஸ்னீக்கர்ஸ் காலணிகளை அணிந்து பணிக்கு வர அரசு முழு அனுமதி அளித்துள்ளது.
கடுமையான வெயில் காலத்தில் ஊழியர்கள் எவ்வித அசௌகரியமும் இன்றி, மிகவும் வசதியாகத் தங்களது பணிகளைச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்த மனிதாபிமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜப்பான் அரசின் இந்தச் சுவாரசியமான மற்றும் நெகிழ்வான ஆடை விதி மாற்றம் உலக அளவில் உள்ள மற்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் கவனத்தையும் தற்போது ஈர்த்துள்ளது.
