290 வகை உணவுகளுடன் மருமகனை நெகிழ வைத்த மாமியார்

WhatsApp Image 2026-01-16 at 12.48.03 PM

அன்பு அதிகமா இருந்தா விருந்து இப்படித்தான்! மருமகனுக்காக 290 வகை உணவு !

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் நர்சிப்பட்டினம், சாந்தி நகரை சேர்ந்தவர் ரமேஷ் குமார். அவரது மனைவி கலாவதி. இவர்களின் மகளுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்குப் பிறகு மருமகனை மனமார வரவேற்க வேண்டும் என்ற ஆசையில், கலாவதி ஒரு வித்தியாசமான விருந்தை ஏற்பாடு செய்தார். மருமகனுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்க வேண்டும் என்பதற்காக, ஆடு, கோழி, முட்டை, மீன் போன்ற அசைவ உணவுகள், பல்வேறு இனிப்பு மற்றும் கார வகைகள் என மொத்தம் 290 வகையான உணவுகளை அவர் சமைத்தார்.

இந்த உணவுகள் அனைத்தையும் ஒரு அறை முழுவதும் அடுக்கி வைத்து, மருமகனுக்கு ஆச்சரியம் அளிக்க திட்டமிட்டனர். அதன்படி, அவரது கண்களை துணியால் கட்டி அந்த அறைக்குள் அழைத்து வந்தனர். பின்னர் கண் கட்டை அவிழ்த்ததும், கண்முன் பரந்திருந்த 290 வகையான உணவுகளை பார்த்த மருமகன், என்ன செய்வது என்று தெரியாமல் சில நிமிடங்கள் அசந்து நின்றார்.

இந்த விருந்தோம்பல் நிகழ்வு அந்தப் பகுதியில் பெரும் கவனத்தை ஈர்த்தது. சமீப காலமாக பல்வேறு இடங்களில், புதுமாப்பிள்ளைகளுக்கு 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் பரிமாறப்படும் விருந்துகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Consent to service google ads. אינגה בקריות – נערות ליווי בבית שאן. Cumhuriyet mahallesi taksi | Çerkezköy 7/24 hızlı taksi.