வரலாறு படைத்த தமிழ்நாடு! 78 ஆண்டுகளில் முதல்முறை தேசிய பேட்மிண்டன் சாம்பியன்!

New Project - 2025-12-26T112627.738

இந்திய விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளது. விஜயவாடாவில் நடைபெற்ற 78-வது தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழ்நாடு ஆண்கள் அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளது. தேசிய பேட்மிண்டன் வரலாற்றிலேயே தமிழ்நாடு ஆண்கள் அணி, குழுப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் இந்த ஆண்டுக்கான தேசிய பேட்மிண்டன் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் ஆண்கள் பிரிவின் இறுதிப் போட்டியில், பலம் வாய்ந்த ஹரியானா அணியை எதிர்த்து தமிழ்நாடு அணி களமிறங்கியது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த இறுதி ஆட்டத்தில், தமிழக வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஹரியானா அணியை வீழ்த்தினர்.

சுமார் 78 ஆண்டுகால தேசிய பேட்மிண்டன் வரலாற்றில், இதுவரை தமிழ்நாடு ஆண்கள் அணி கோப்பையை வென்றதில்லை என்ற குறையை, இந்தத் தங்கம் வென்றதன் மூலம் தற்போதைய அணி போக்கியுள்ளது. இந்த வெற்றி தமிழக பேட்மிண்டன் துறைக்கு ஒரு மிகப் பெரிய உத்வேகத்தை அளித்துள்ளது. சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர்களுக்குக் விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

乌龙茶. 專業 it方案 ,提供全面的技術解決方案 | tech computer company. tech news today.