இனி வேகம் எடுக்கும் ரயில்கள்! பயண நேரம் குறைப்பு – தெற்கு ரயில்வேயின் புத்தாண்டு பரிசு!

New Project - 2025-12-18T145652.967

தெற்கு ரயில்வே 2026-ம் ஆண்டிற்கான புதிய கால அட்டவணையை வரும் ஜனவரி 1-ந் தேதி முதல் அமல்படுத்த உள்ளது. ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், பயணிகளின் வசதியை மேம்படுத்தவும் இந்த முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, சில முக்கிய ரயில்கள் தாம்பரம் அல்லது சென்னை கடற்கரை நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.

1.தாம்பரம் வரை மட்டுமே: உழவன் எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மற்றும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் பிப்ரவரி தொடக்கம் வரை சென்னை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். 

2.சார்மினார் எக்ஸ்பிரஸ் ஜனவரி 1 முதல் பிப்ரவரி 3 வரை எழும்பூருக்குப் பதிலாக சென்னை கடற்கரை ரயில் நிலையத்தைச் சென்றடையும். 

3.சென்னை – நரசாபூர் வந்தே பாரத் ரயிலின் நேரங்களும் ஜனவரி மத்தியில் மாற்றியமைக்கப்பட உள்ளன. 

தண்டவாளப் பராமரிப்பு மற்றும் மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்ததால், பல ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு பயண நேரம் 30 நிமிடங்கள் வரை குறைக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 1 முதல் ஸ்லீப்பர் கிளாஸ் (Sleeper Class) பெட்டிகளில் பயணிப்பவர்களுக்கும் ‘பெட் ரோல்’ (Bedroll) வழங்கும் புதிய சேவை அறிமுகமாகிறது. கூட்ட நெரிசலைத் தவிர்க்கச் சில ரயில்களில் கூடுதல் பெட்டிகளும் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளன.


முன்பதிவு செய்த பயணிகளுக்கு அவர்களின் மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி (SMS) மூலம் தகவல் அனுப்பப்படும். இருப்பினும், பயணிகள் தங்களின் ரயில் நேரங்களை உறுதிப்படுத்த NTES இணையதளம் அல்லது IRCTC செயலி மூலம் சரிபார்த்துக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

נערות ליווי בחולון : תיירות צעירות או ישראליות סקסיות | אסקורט אנג'לינה strip johnny. De/koeln fehlen bis 2029 fast 250 millionen euro fuer lindweiler und chorweiler ist das ein alarmsignal/ ) umso. Darwin air & sea cargo service limited.