புதுமைப் பெண் திட்டம்: இனி அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கும் மாதம் ரூ. 1000

puthumaipen extension 1200 b

ரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவியர்க்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம் எனும் புதுமைப் பெண் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த 5.9.2022 அன்று தொடங்கி வைத்தார்.

இத்திட்டம், வறுமை காரணமாக உயர்கல்வியில் சேர இயலாத மகளிர்க்கு உயர்கல்வி வாய்ப்பை தருவதோடு, பெற்றோரின் பொருளாதாரச் சுமையை குறைக்கிறது. இளம் வயது திருமணங்களையும் தடுக்கிறது. மாணவியர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்கிறது. இத்திட்டத்தின் பயனாக, மாணவியர்கள் அதிகளவில் உயர்கல்வியில் சேர்ந்துள்ளதாகவும், இதுநாள் வரையில், 4 லட்சத்து 25 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்துள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மாணவிகளுக்கு வழங்கப்படுவதைப் போன்று 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்கிடும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தை கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி அன்று கோவையில் தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில், இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் படித்துள்ள மாணவியர்களுக்கு மட்டுமல்லாமல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயர் கல்வியில் சேரும் மாணவியர்க்கும் மாதம் 1,000 வழங்கும் வகையில், புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கலின்போது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார்.

புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம்

அதன்படி புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கத்தை இன்று தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

75 ஆயிரம் மாணவியர் பயன்

அப்போது பேசிய ஸ்டாலின், ” அரசு உதவிபெறும் பள்ளியில் படித்து, உயர்கல்வியில் சேரும் மாணவியருக்கும் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகின்ற வகையில் இன்றைக்கு புதுமைப் பெண் திட்டத்தை விரிவுபடுத்தியிருக்கிறோம். இந்தத் திட்டத்தின்கீழ், தமிழ்நாடு முழுவதும் சுமார் 75 ஆயிரம் மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கப் போகின்றோம்.

“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்; எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி” எனப் புதுமைப் பெண்கள் குறித்து பாரதி கண்ட கனவை புதுமைப் பெண் திட்டம் மூலமாக நம்முடைய திராவிட மாடல் அரசு நனவாக்கியிருக்கிறது.

இதன் நோக்கம், பள்ளியின் படிப்பை நிறுத்த வேண்டிய சூழலில் இருக்கின்ற மாணவிகளுக்கு நம்முடைய ஆட்சியில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கிடைப்பதால், அவர்கள் கல்லூரிக்குள் நுழைகிறார்கள். ஒரு ஆண் கல்லூரிக்குள் நுழைந்தால், அது கல்வி வளர்ச்சி! அதுவே ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால், அது சமூகப் புரட்சி!

அந்த வகையில், புதுமைப் பெண் திட்டத்தால், தமிழ்நாட்டில் உயர்கல்வியை முடிக்கின்ற பெண்களின் எண்ணிக்கை இன்னும் இன்னும் அதிகமாகும். அறிவுத்திறன் கூடும். திறமைசாலிகள் அதிகமாக உருவாகுவார்கள். அதன் காரணமாக நம்முடைய தமிழ்நாட்டை தேடி, உலகின் முன்னணி நிறுவனங்கள் தொழில் தொடங்க வருவார்கள். ரொம்ப முக்கியமாக, பாலின சமத்துவம் ஏற்படும். குழந்தை திருமணங்கள் குறையும். பெண்கள் அதிகாரம் பெறுவார்கள். பெண்களின் படிப்பால், அவர்களின் தலைமுறையே காக்கப்படும்.

இந்த ஒரு திட்டத்தால் இத்தனை பயன்கள் கிடைக்கிறது. “கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்” என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். உயர்கல்வி பெறாத பெண்களே தமிழ்நாட்டில் இல்லை என்ற நிலையை உருவாக்காமல் நான் ஓயமாட்டேன்!” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

International social service hong kong branch. cenforce soft 100 mg preis check erschwingliche angebote online l apothekeeu. Tech in healthcare : how innovations are revolutionizing patient care » tech news today.