இந்தியா vs பாகிஸ்தான் T20 உலகக்கோப்பை

New Project (77)

பகல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாகப் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்த சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, நாளை நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை மோதலிலும் அதே அதிரடியைத் தொடருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் டாஸ் நிகழ்வின் போதும், ஆட்டம் முடிந்த பிறகும் இரு அணி வீரர்களும் கைகுலுக்கி பரஸ்பரம் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்வது ஒரு மரபாக இருந்து வருகிறது. ஆனால், இந்தியா – பாகிஸ்தான் இடையேயான தற்போதைய அரசியல் சூழல் இந்த விளையாட்டு மரபிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பகல்காம் தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக, கடந்த ஆசிய கோப்பை போட்டியின்போது பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான வீரர்கள் அதிரடியாக மறுத்துவிட்டனர். இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியது.

இந்தச் சர்ச்சையின் உச்சகட்டமாக, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் அமைச்சருமான மோஷின் நக்வியிடம் இருந்து ஆசிய கோப்பையைப் பெற்றுக்கொள்ளவும் சூர்யகுமார் யாதவ் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். ஒரு நாட்டின் அமைச்சராகவும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவராகவும் இருக்கும் ஒருவரிடம் இருந்து கோப்பையை வாங்க மறுத்தது, இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களிடையே ஒரு மிகப்பெரிய அரசியல் மற்றும் ராஜதந்திர சர்ச்சையை உருவாக்கியது. இந்திய வீரர்களின் இந்தத் துணிச்சலான முடிவு, எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான ஒரு மௌனப் போராட்டமாகவே பார்க்கப்பட்டது.

இந்த கசப்பான சம்பவங்களுக்குப் பிறகு, நாளை நடைபெறவுள்ள 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மீண்டும் நேருக்கு நேர் மோதுகின்றன. முதலில் இந்தியாவுடன் விளையாடத் தயக்கம் காட்டிய பாகிஸ்தான், நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னரே தற்போது ஒப்புக்கொண்டுள்ளது. இருப்பினும், நாளைய ஆட்டத்தின்போது இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்குவார்களா? என்ற கேள்வி உலகெங்கும் உள்ள ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இது தொடர்பாக ஐ.சி.சி-யிடம் (ICC) பாகிஸ்தான் தரப்பு, இந்திய வீரர்கள் கட்டாயம் கைகுலுக்க வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்ததாகவும், ஆனால் “விளையாட்டு மரபுகளில் கட்டாய நிபந்தனைகளை விதிக்க முடியாது” எனக் கூறி அதனை ஐ.சி.சி நிராகரித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் நாளை மைதானத்தில் இந்திய வீரர்களின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலுடன் காத்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Consent to service google ads. באזור המרכז אליסה – בחורה מומלצת 100% תמונות אמיתיות נערות ליווי באשדוד strip johnny. Çerkezköy taksi çağır 0533 664 26 77.