தீபாவளி 2025: பட்டாசு வெடிக்க 2 மணி நேர அனுமதி!

New Project - 2025-10-14T183146.286

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தமிழ்நாடு அரசு தீபாவளி அன்று (அக்டோபர் 20, 2025) பட்டாசு வெடிக்க இரு மணி நேரம் மட்டும் அனுமதி அளித்துள்ளது.

காலை 6-7 மணி மற்றும் இரவு 7-8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, காற்று மாசு, சத்த மாசு மற்றும் உடல்நலப் பாதிப்புகளைக் குறைக்கும் நோக்கில் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB), பசுமை பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இந்த நேரங்களை மீறி பட்டாசு வெடித்தால், ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும். சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். விழிப்புணர்வு பதாகைகள் மூலம் மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

தீவுத்திடல் பட்டாசு மார்க்கெட்டில், பசுமை பட்டாசு விற்பனை 40% அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். பொதுமக்கள், பாதுகாப்பான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தீபாவளி கொண்டாட்டத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

黑茶. International social service hong kong branch. tech news today ».