சாரல் திருவிழா நாளை கோலாகலத் தொடக்கம்!

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உலகப்புகழ்பெற்ற சாரல் திருவிழா நாளை முதல் மிகக் கோலாகலமாகத் தொடங்குகிறது. தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வரும் நிலையில், சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் இந்த விழா ஆண்டதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
நாளை தொடங்கும் இந்தச் சாரல் திருவிழா வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை தொடர்ந்து பல நாட்கள் நடைபெறவுள்ளது. விழா நாட்களில் தினமும் அரசு அதிகாரப்பூர்வமாக நடத்தும் பல்வேறு கிராமிய மற்றும் பாரம்பரியக் கலைநிகழ்ச்சிகள், கவிஅரங்கம், நாய் கண்காட்சி, படகுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் நடைபெற இருக்கின்றன.
குற்றாலத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை சார்பில் விழாவுக்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அருவிகளில் நீராடி மகிழ்வதோடு, மாலை நேரங்களில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கவும் சுற்றுலாப் பயணிகள் ஆவலுடன் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
