மே 1 முதல் அமலாகும் புதிய மாற்றங்கள்!

New Project (1)

1. எல்பிஜி சிலிண்டர் விலை மாற்றம்: ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எரிவாயு சிலிண்டர் விலைகள் மாற்றி அமைக்கப்படும். சர்வதேச சந்தை நிலவரப்படி, நாளை முதல் வீட்டு உபயோக மற்றும் வணிக ரீதியான சிலிண்டர்களின் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

2. காப்பீட்டு பிரீமியம் (PMJJBY & PMSBY): பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் சுரக்ஷா பீமா யோஜனா திட்டங்களுக்கான ஆண்டு பிரீமியம் தொகை மே மாதத்தில் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து தானாகவே எடுக்கப்படும் (Auto-debit). எனவே, கணக்கில் போதுமான இருப்பு இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

3. வங்கி இ-கேஒய்சி (e-KYC) காலக்கெடு: வங்கிக் கணக்குகளில் e-KYC தகவல்களைப் புதுப்பிக்க நாளை (மே 1) கடைசி நாளாகும். இதைச் செய்யத் தவறினால், உங்கள் வங்கிப் பரிவர்த்தனைகள் முடக்கப்பட வாய்ப்புள்ளது. உடனடியாக வங்கி கிளை அல்லது மொபைல் ஆப் மூலம் சரிபார்ப்பை முடிக்கவும்.

4. எஸ்பிஐ கார்டு (SBI Card) கட்டணங்கள்: எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு. தாமதக் கட்டணங்கள் (Late Payment Fees) மற்றும் ஆண்டுக் கட்டணத் தள்ளுபடி விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது சிறிய தொகை நிலுவைகளுக்கும் பொருந்தும்.

5. ஆன்லைன் கேமிங் புதிய விதிகள்: ‘ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறைச் சட்டம் 2025’-இன் படி புதிய தரநிலைகள் அமலாகின்றன. கேம்களுக்கான சான்றிதழ் செல்லுபடியாகும் காலம் 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

6. பிஎஃப் (PF) பணம் எடுக்கும் முறை: பிஎஃப் தொகையை ஏடிஎம் அல்லது யுபிஐ (UPI) மூலம் எடுப்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *