சிக்னல் கவலை இனி இல்லை! BSNL அதிரடி!

New Project - 2026-01-02T160404.135

இந்தியாவின் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL), இந்த புத்தாண்டில் தனது வாடிக்கையாளர்களுக்கு மிக முக்கியமான தொழில்நுட்ப வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘வாய்ஸ் ஓவர் வைஃபை’ (Voice over Wi-Fi) எனப்படும் வைஃபை அழைப்பு சேவையை இப்போது நாடு முழுவதும் உள்ள அனைத்துத் தொலைத்தொடர்பு வட்டங்களிலும் பிஎஸ்என்எல் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் சவாலான சூழல்களிலும் தடையற்ற மற்றும் உயர்தரமான இணைப்பை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

இந்த சேவையின் மூலம் மொபைல் நெட்வொர்க் சிக்னல் குறைவாக உள்ள இடங்களிலும், வைஃபை நெட்வொர்க்கைப் பயன்படுத்தி குரல் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பவோ பெறவோ முடியும். குறிப்பாக வீடுகளின் அடித்தளங்கள் (Basements), தடிமனான சுவர்கள் கொண்ட அலுவலகங்கள் மற்றும் மொபைல் டவர் சிக்னல் எட்டாத தொலைதூரப் பகுதிகளில் இருப்பவர்களுக்கு இந்த வசதி ஒரு வரப்பிரசாதமாகும். மிகத் தெளிவான ஆடியோ தரத்துடன் பேச உதவும் இந்தச் சேவைக்கு பிஎஸ்என்எல் எந்தவிதமான கூடுதல் கட்டணமும் வசூலிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பயன்படுத்துவது எப்படி? வாடிக்கையாளர்கள் இந்த வசதியைப் பெற தங்களது ஸ்மார்ட்போனில் உள்ள ‘Settings’ பகுதிக்குச் சென்று ‘Wi-Fi Calling’ என்ற விருப்பத்தை மட்டும் இயக்கினால் போதுமானது. உங்களது மொபைல் போன் இந்தத் தொழில்நுட்பத்திற்கு ஒத்துழைக்கிறதா என்பதை அறிய அல்லது கூடுதல் உதவிக்கு 1800-150-3 என்ற இலவச எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது அருகில் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகலாம். தனியார் நிறுவனங்களுக்கு இணையாக பிஎஸ்என்எல் மேற்கொண்டு வரும் இந்தத் தொழில்நுட்பப் புரட்சி வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

אליסה – אזור תל אביב – תמונה 3. Über 1000 spd stimmen gegen olympia : die spd basis bremst den größenwahn. 我們提供專業的 網絡工程 服務,包括設計、 佈線工程 和優化網絡,並提供網絡安全和監控服務,以確保您的網絡安全、穩定和高效運行。.