AI தொழில்நுட்பமும் தமிழக அரசின் எதிர்கால இலக்கும்!

Artificial Intel 1200

மிழ்நாடு சட்டசபையின் நடப்பாண்டிற்கான முதல் கூட்டத்தில் அரசு சார்பில் வழங்கப்பட்ட ஆளுநர் உரையில், செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI (Artificial Intelligence) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் தமிழகத்தின் எதிர்கால இலக்கு என்ன என்பது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் அப்பாவு வாசித்த அந்த உரையில், “தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் தொலைநோக்கு முயற்சியான டைடல் பூங்கா சென்னை ராஜீவ் காந்தி சாலையில், 2000 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதன் மூலம், தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்கு வித்திடப்பட்டது.

அந்த அடிச்சுவடுகளைப் பின்பற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இத்தகைய வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் டைடல் பூங்காவையும்,தஞ்சாவூர், சேலம், விழுப்புரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் மினி டைடல் பூங்காக்களையும். திருச்சி. கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் எல்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களையும் தொடங்கி வைத்துள்ளார்.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் இத்துறை சார்ந்த தொழில்களின் வளர்ச்சிக்கான உகந்த சூழலை உருவாக்குவதிலும், பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் இப்பூங்காக்கள் பெரிதும் உதவும்.

செயற்கை நுண்ணறிவு

உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கைமுறையிலும் தொழில்துறையிலும் பெரும் புரட்சியை ஏற்படுத்திவரும் செயற்கை நுண்ணறிவுத் துறையில், ஒரு முதன்மையான இடத்தை தமிழ்நாடு பெறவேண்டுமென இந்த அரசு விரும்புகிறது. இதற்காக, கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், ஆராய்ச்சி, மருத்துவம் போன்ற துறைகளில் கவனம் செலுத்தும் செயற்கை நுண்ணறிவு (AI) இயக்கத்தை இந்த அரசு தொடங்கியுள்ளது. இந்த இயக்கம் அடுத்த 5 ஆண்டுகளில், இந்தியாவின் முன்னணி செயற்கை நுண்ணறிவு மையங்களில் ஒன்றாக தமிழ்நாட்டை நிலைநிறுத்தும்.

புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் அனைத்துப் பெண்களுக்கும் உயர்கல்வி கிடைக்கச் செய்வதில் வெற்றிகண்ட தமிழக அரசானது, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி பயிலும் காலத்தில் மாதந்தோறும் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்குவதற்கான தமிழ்ப் புதல்வன் திட்டத்தையும் கடந்த ஆண்டு தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், நடப்புக் கல்வியாண்டில் மட்டும் 3.52 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

ஆண்டுதோறும் 10 லட்சத்திற்கும் வாய்ந்தவர்களாக மேற்பட்ட மாணவர்களை திறன் உருவாக்கும் இலக்குடன், இந்த அரசு தொடங்கிய ‘நான் முதல்வன்’ திட்டமானது மாணவர்களை தொழில்சார்ந்த திறன் கொண்டவர்களாக மேம்படுத்தி, இந்தியாவின் இளைஞர்களின் திறன்மிக்க தலைநகரமாக தமிழ்நாட்டை நிலைநிறுத்தியுள்ளது.

2023-24 ஆம் ஆண்டில், இத்திட்டம் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கும், தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு, 2,085 கல்வி நிறுவனங்களில் பயிலும் 14.68 இலட்சம் மாணவர்கள் தற்போது பயன்பெற்றுள்ளனர். அனைவரின் வரவேற்பினையும் பெற்ற இத்திட்டத்தின் மூலம் நடத்தப்படும் வளாக வேலைவாய்ப்பு முகாம்கள் (Campus Placement Drives) வாயிலாக, இதுவரை 2,58,597 மாணவர்கள் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Garden valley surface restoration services | asr california. kamagra polo 100 mg ska förvaras i sin originalförpackning på en torr och sval plats, utom räckhåll för barn och husdjur. Hawaii car transport.