மோன்தா புயல் மேலும் வலுப்பெறுகிறது!

New Project (1)

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மோன்தா புயலாக வலுப்பெற்றுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மிகக் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரித்துள்ளது.

புயலின் நிலை: மோன்தா புயல் மணிக்கு 15 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்கிறது. இன்று (அக். 27) அதிகாலை 5.30 மணிக்கு அது சென்னைக்கு தென்கிழக்கே 560 கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்தது. நாளை (அக். 28) இது தீவிர புயலாக வலுப்பெற்று, மாலை அல்லது இரவில் ஆந்திராவின் காக்கிநாடா அருகே கரையைக் கடக்கலாம். அப்போது 90–100 கிமீ வேகத்தில் காற்றடிக்கக்கூடும்.

மழை வாய்ப்பு: அக். 27 – ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களில் மிகக் கனமழை; விழுப்புரம், செங்கல்பட்டு, புதுச்சேரியில் கனமழை.
அக். 28 – திருவள்ளூரில் மிகக் கனமழை; சென்னை, காஞ்சிபுரம், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரியில் கனமழை.அக். 29–31 – தமிழ்நாடு, புதுச்சேரி முழுவதும் லேசான முதல் மிதமான மழை.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: மோன்தா புயலால் கடல் சீற்றமாக இருப்பதால், அக். 30 வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகப்பட்டினம், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடற்கரைப் பகுதிகளில் மணிக்கு 45–65 கிமீ வேகத்தில் காற்று வீசும் வாய்ப்பு உள்ளது.அரசு துறைகள் மீட்பு நடவடிக்கைகளுக்கு தயார் நிலையில் உள்ளன. மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, வானிலை எச்சரிக்கைகளை தொடர்ந்து கவனிக்குமாறு வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Earn money recurring online by referring others — completely free and simple to use on websites and social media. Just a moment.... power only wyoming.