‘அக்னி நட்சத்திரம்’: வெப்பத்தை தணித்த மழை… எத்தனை நாட்களுக்குத் தொடரும்?

Rain 1200

மே 4, ஞாயிறு அன்று தொடங்கிய ‘அக்னி நட்சத்திரம்’ (கத்திரி வெயில்), தமிழ்நாட்டில் கடுமையான வெப்பத்தை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதே நாளில் பெய்த இடி மின்னலுடன் கூடிய கனமழை, சென்னை, உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பத்தை தணித்து, மக்களுக்கு ஆறுதலை அளித்தது.

தமிழ்நாட்டில் மே 4 அன்று பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமழை பெய்தது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் கோடை மழை தீவிரமடைந்துள்ளது. இந்த மழை, விவசாயிகளுக்கு நிவாரணம் அளித்தாலும், சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் மற்றும் தண்ணீர் தேங்குதல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தியது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கோயம்புத்தூர், நீலகிரி, மதுரை, திண்டுக்கல், தென்காசி, மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பதிவானது. குறிப்பாக, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், மற்றும் கடலூரில் கனமழை பெய்தது. சென்னையில் தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் மாலை 4 மணி முதல் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. மேலும், இலேசான போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

கனமழையால், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் பகுதிகளில் வயல்களில் தண்ணீர் தேங்கியதாகவும், சென்னையில் சாலைகளில் மழைநீர் தேங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றும் நாளையும் மழை நிலவரம்

இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், நீலகிரி, மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் இலேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 40-50 கி.மீ வேகத்தில் காற்று வீசலாம். மாலை மழைக்கு வாய்ப்பு உள்ளது.

அதேபோன்று மே 6 நாளை தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களான கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் வடக்கு மாவட்டங்களான திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் மிதமான மழை தொடரும். சென்னையில் வெப்பநிலை 35 டிகிரி சென்டிகிரேடு வரை உயரலாம். ஆனால், மாலையில் மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Consent to service google ads. ניקול – תל אביב והאזור – תמונה 1. Çerkezköy meydan taksi hizmeti.