அரையாண்டு விடுமுறை முடிந்து ஜன.5-ல் பள்ளிகள் திறப்பு…

New Project - 2026-01-02T145150.034

தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து, வரும் ஜனவரி 5-ம் தேதி (திங்கட்கிழமை) முதல் அனைத்துப் பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட உள்ளன. நீண்ட விடுமுறைக்குப் பிறகு மாணவர்கள் பள்ளிக்குத் திரும்ப உள்ள நிலையில், பள்ளி வளாகங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் தூய்மைப் பணிகள் குறித்துப் பள்ளிக்கல்வித் துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கும் (CEO) முக்கிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே மாணவர்களுக்குத் தேவையான விலையில்லாப் பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பள்ளி வளாகங்கள் முழுமையாகத் தூய்மைப்படுத்தப்பட வேண்டும் என்றும், குறிப்பாக மாணவர்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் (High-tech Labs), திறன் வகுப்பறைகள் மற்றும் இணையதள வசதிகள் எவ்விதத் தடையுமின்றிச் செயல்படுவதைக் கண்காணிக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு, காலை உணவுத் திட்டம் மற்றும் சத்துணவுக் கூடங்கள், அங்குள்ள பாத்திரங்கள் ஆகியவற்றை மிகவும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மிக முக்கியமாக, பழுதான பள்ளி கட்டிடங்கள் மற்றும் வகுப்பறைகளை உடனடியாகப் பூட்டி வைக்கவும், அவற்றை இடிப்பதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் பாதுகாப்பான சூழலில் தங்களது கல்வியைத் தொடர்வதை உறுதி செய்யப் பள்ளிக்கல்வித் துறை தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

茶?. ip cam 解決方案. The future is now : top 10 technologies shaping 2025 » tech news today.