RAM, SSD விலைகள் அதிகரிப்பு…இதுதான் காரணமா!

New Project (20)

ஸ்மார்ட்போன்கள், லாப்டாப்கள், டெஸ்க்டாப்கள், டேப்லெட்டுகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் முக்கிய இடம் வகிக்கும் RAM மற்றும் SSD-களின் விலை தற்போது 30 முதல் 35 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. உலகளவில் AI தொழில்நுட்ப தேவைகள் அதிகரித்திருப்பதே இதற்கான முக்கிய காரணமாக குறிப்பிடப்படுகிறது.

தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுவதாவது: சமீபத்திய ஸ்மார்ட்போன்கள், ஹை-எண்ட் பிசிக்கள், சர்வர்கள், AI செயல்பாடுகளை மேற்கொள்ளும் சாதனங்கள் அனைத்தும் அதிக திறன் கொண்ட RAM மற்றும் SSD-களை தேவைப்படுத்துகின்றன. இதனால், மொத்த சந்தையில் டிமாண்ட் அதிகரித்து, சப்ளை குறைந்துள்ளதால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

முக்கியமாக, சாம்சங் (Samsung), மைக்ரான் (Micron), எஸ்.கே. ஹெனிக்ஸ் (SK Hynix) போன்ற உலகின் பெரிய மெமரி சிப் உற்பத்தி நிறுவனங்கள் தற்போது AI சார்ந்த ஹார்ட்வேர் மேம்பாட்டில் அதிக முதலீடுகளை செய்து வருகின்றன. இதன் காரணமாக பொதுப்பயன்பாட்டு RAM மற்றும் SSD உற்பத்தி அளவு குறைந்து, அதனால் விலையும் உயர்ந்துள்ளது.

மேலும், AI மாடல்கள், கிளௌட் சர்வர்கள், டேட்டா சென்டர்கள் போன்ற துறைகளின் வளர்ச்சி காரணமாக மெமரி தேவைகள் வருங்காலத்திலும் அதிகரிக்கக்கூடும் என தொழில் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இதனால், தற்போதைய விலை உயர்வு தற்காலிகமாக இல்லாமல், இன்னும் சில மாதங்கள் தொடர வாய்ப்பு உள்ளது.

வாடிக்கையாளர்கள், குறிப்பாக புதிய PC அமைக்கும் பயனர்கள், லாப்டாப் அப்கிரேட் செய்ய விரும்புவோர் ஆகியோர் இந்த விலை உயர்வால் பாதிக்கப்படலாம். எனினும், ஆண்டின் இறுதியில் உற்பத்தி அதிகரிக்கும் நிலையில் விலைகள் சீராகும் வாய்ப்பும் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Consent to service google ads. אווה – קריות והסביבה נערות ליווי בבית שאן strip johnny. Çerkezköy meydan taksi Çağır | 7/24 hızlı ve güvenli taksi hizmeti.