விமான தளத்தை காலி செய்த இந்தியா!

New Project (21)

மத்திய ஆசியாவில் இந்தியாவின் முக்கியமான மூலோபாய ஆதிக்கத்தை பிரதிபலித்த தஜிகிஸ்தானின் அயினி விமான தளம் இனி இந்தியாவிடம் இல்லை. 2002 முதல் இந்தியா இயக்கிய இந்த விமான தளத்தை, ஒப்பந்தம் நீட்டிக்காததால், இந்திய ராணுவம் முழுமையாக விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் எல்லைக்கு அப்பால் இருந்த ஒரே வெளிநாட்டு விமான தளம் என்பதால், அயினி தளம் மிகப்பெரும் மூலோபாய செல்வமாகக் கருதப்பட்டது. இந்த தளம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சீனா ஆகியவற்றின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், அவசர கால ராணுவ நடவடிக்கைகளில் இந்தியாவிற்கு ஒரு முக்கிய அனுகூலமாகவும் இருந்தது.

2022ல் ஒப்பந்தம் முடிவடைந்தபோது அதை நீட்டிக்க தஜிகிஸ்தான் மறுத்துவிட்டதாக தூதரக வட்டாரங்கள் கூறுகின்றன. இதற்கான முக்கிய காரணங்களில் சீனாவின் அதிகரித்த செல்வாக்கு, ரஷ்யாவின் பிராந்திய கட்டுப்பாடு மற்றும் தஜிகிஸ்தானின் உள்நாட்டு அரசியல் மாற்றங்கள் குறிப்பிடப்படுகின்றன.


தஜிகிஸ்தான் அரசு, “இப்போது இந்த தளத்தை நாங்களே நிர்வகிக்கிறோம்” என அறிவித்துள்ளது.இந்தியாவின் புவிசார் அரசியல் நிலைக்கு அதிர்ச்சி அயினி தளத்தை இழந்தது, இந்தியாவின் மத்திய ஆசியா மூலோபாயத்தில் பெரிய பின்னடைவு என பாதுகாப்பு நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.


இது,இந்தியாவின் ‘Connect Central Asia’ கொள்கைக்கு தடையாகும்,பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை அதிகரிக்கும்,ஆப்கானிஸ்தான்–பாகிஸ்தான் பகுதிகளில் இந்திய கண்காணிப்பு திறன் குறையும்என கூறப்படுகிறது.

இந்திய ராணுவம் மற்றும் வெளிநாட்டு கொள்கை வட்டாரங்கள், பிராந்தியத்தில் புதிய கூட்டணிகளை உருவாக்க விரும்பும் நிலையில், அயினி தள இழப்பு இந்தியாவின் நீண்டகால பாதுகாப்பு நலன்களுக்கு ஏற்ற மாற்றமா என்பது குறித்து விவாதம் சூடுபிடித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Consent to service google ads. נערות ליווי בחולון : תיירות צעירות או ישראליות סקסיות | אסקורט אנג'לינה strip johnny. Fevzipaşa mahallesi taksi | Çerkezköy 7/24 en yakın taksi.