கோவை விமான நிலையத்தில் கண்ணாடி உடைப்பு – பயணிக்கு ரூ.500 அபராதம்

New Project (27)

கோவை விமான நிலையத்தில் பயணி ஒருவர் அவசரமாக வெளியேற முயன்றபோது, சூட்கேஸ் கதவை மோதியதால் கண்ணாடி கதவு உடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நாடு முழுவதும் விமானிகள் மற்றும் கேபின் குழுவினரின் ஓய்வு நேரத்தை 36 மணி நேரத்தில் இருந்து 48 மணி நேரமாக உயர்த்தி சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் (DGCA) உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து, உள்நாட்டு விமான சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. பல நகரங்களில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் சிரமம் அனுபவித்து வருகின்றனர்.

உத்தரவு பின்னர் திரும்பப் பெறப்பட்டாலும், விமான சேவை ரத்து அதிகரித்ததேயில்லை. கோவையில் நேற்று 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று தொடர்ந்து 7-வது நாளாக 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதில் கோவை–சென்னை ருட்டில் இயக்கப்படும் 2 விமானங்களும் அடங்கும். பயணிகள் மாற்று போக்குவரத்து சாலைகளை பயன்படுத்தி பயணம் மேற்கொள்வது கட்டாயமாகியுள்ளது.

இதற்கிடையில், அபுதாபி–கோவை விமானத்தில் வந்த பயணிகள் இன்று காலை விமான நிலையத்தில் வெளியேறியபோது, ஒரு பயணியின் சூட்கேஸ் தவறுதலாக கண்ணாடி கதவுடன் மோதியதால் கதவு உடைந்தது. தகவல் அறிந்த மத்திய தொழில்பாதுகாப்பு படை (CISF) மற்றும் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவசரத்தில் சென்ற பயணியின் பயணப்பெட்டி மோதியதே காரணம் எனத் தெரிய வந்ததால், அவருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

关于我们. ip cam 解決方案. Believe it or not, electric vehicles aren’t a new invention.