லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜரானார் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு

New Project (88)

திமுக ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது சாலை அமைக்கும் பணிகளில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு இன்று (ஜூலை 15) சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.

இந்த முறைகேடு புகார் தொடர்பாக ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், கூடுதல் விவரங்களைப் பெறுவதற்காக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு விசாரணைக்கான சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, இன்று காலை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு வருகை தந்த அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பான கூடுதல் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *