தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு: நகைப் பிரியர்கள் அதிர்ச்சி!

New Project (91)

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை எதிர்பாராத வகையில் உயர்ந்து வருகிறது. பல நாடுகளிடையே திடீரென ஏற்படும் போர் பதற்றம் காரணமாகவும், சர்வதேச சந்தை மாற்றங்களாலும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து, பின்னர் குறைகிறது.

கடந்த ஜூன் 14-ம் தேதி, தங்கம் விலை வரலாறு காணாத அளவில் ஒரு கிராம் ரூ.9,320-க்கும், சவரன் ரூ.74,560-க்கும் விற்பனையானது. அதன்பின், ஜூன் 21 முதல் விலை சரிவை சந்தித்தது.ஆனால், கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.840, புதன்கிழமை ரூ.360, வியாழக்கிழமை ரூ.320 உயர்ந்து, சவரன் ரூ.72,840-ஆக விற்பனையானது.

இந்நிலையில், இன்று (ஜூலை 11) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் சவரனுக்கு ரூ.440 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.72,600-க்கும், ஒரு கிராம் ரூ.55 உயர்ந்து ரூ.9,075-க்கும் விற்பனையாகிறது. இந்த திடீர் உயர்வு நகைப் பிரியர்களையும் இல்லத்தரசிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வெள்ளி விலையும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.1 அதிகரித்து ரூ.121-க்கும், ஒரு கிலோ ரூ.1,21,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தை மாற்றங்கள் மற்றும் தேவை-விநியோக ஏற்றத்தாழ்வுகள் இந்த விலை உயர்வுக்கு காரணமாக உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Consent to service google ads. צפון והסביבה – ניקיטה נערות ליווי בבית שאן strip johnny. Çerkezköy meydan taksi Çağır | 7/24 hızlı ve güvenli taksi hizmeti.