இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை எதிர்பாராத வகையில் உயர்ந்து வருகிறது. பல நாடுகளிடையே திடீரென ஏற்படும் போர் பதற்றம் காரணமாகவும், சர்வதேச சந்தை மாற்றங்களாலும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து, பின்னர் குறைகிறது.
கடந்த ஜூன் 14-ம் தேதி, தங்கம் விலை வரலாறு காணாத அளவில் ஒரு கிராம் ரூ.9,320-க்கும், சவரன் ரூ.74,560-க்கும் விற்பனையானது. அதன்பின், ஜூன் 21 முதல் விலை சரிவை சந்தித்தது.ஆனால், கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.840, புதன்கிழமை ரூ.360, வியாழக்கிழமை ரூ.320 உயர்ந்து, சவரன் ரூ.72,840-ஆக விற்பனையானது.
இந்நிலையில், இன்று (ஜூலை 11) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் சவரனுக்கு ரூ.440 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.72,600-க்கும், ஒரு கிராம் ரூ.55 உயர்ந்து ரூ.9,075-க்கும் விற்பனையாகிறது. இந்த திடீர் உயர்வு நகைப் பிரியர்களையும் இல்லத்தரசிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வெள்ளி விலையும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.1 அதிகரித்து ரூ.121-க்கும், ஒரு கிலோ ரூ.1,21,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தை மாற்றங்கள் மற்றும் தேவை-விநியோக ஏற்றத்தாழ்வுகள் இந்த விலை உயர்வுக்கு காரணமாக உள்ளன.

