சென்னை அருகே டிக்ஸன் டெக்னாலஜீஸின் புதிய ஆலை: 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு!

Dixon Technologies

மிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் மற்றொரு மைல்கல்லாக, மின்னணு உற்பத்தி சேவை நிறுவனமான டிக்ஸன் டெக்னாலஜீஸ், சென்னை அருகே ரூ.1,000 கோடி மதிப்பிலான புதிய ஆலையை அமைக்க உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், புதன்கிழமை அன்று தமிழ்நாடு அரசுடன் கையெழுத்தானது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரகடத்தில் இந்த ஆலை அமையவுள்ளது. இதன் மூலம், 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என மாநில அரசு அறிவித்துள்ளது. இது, தமிழக இளைஞர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும்.

இந்த ஒப்பந்தம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் முன்னிலையில், தலைமைச் செயலகத்தில் கையெழுத்தானது. டிக்ஸன் டெக்னாலஜீஸின் நிர்வாகத் தலைவர் சுனில் வாச்சானி மற்றும் துணைத் தலைவர் பிரித்வி வாச்சானி ஆகியோர், தமிழ்நாட்டின் முதலீட்டு ஊக்குவிப்பு முகமையான கைடன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தாரெஸ் அகமதுடன் ஆவணங்களைப் பரிமாறிக்கொண்டனர்.

இந்த ஆலை, ஒரகடத்தில் உள்ள இண்டோஸ்பேஸ் தொழிற்பூங்காவில், சென்னையிலிருந்து 45 கி.மீ. தொலைவில் அமையவுள்ளது. இது மடிக்கணினிகள் மற்றும் ஆல்-இன்-ஒன் தனிநபர் கணினிகளை உற்பத்தி செய்யும் மையமாகவும், பிற நிறுவனங்களுக்கு மின்னணு உற்பத்தி சேவைகளை வழங்கும் தளமாகவும் செயல்படும்.

5,000 பேருக்கு வேலைவாய்ப்பு

1993-ல் தொடங்கப்பட்ட டிக்ஸன் டெக்னாலஜீஸ், சாம்சங், சியோமி, மோட்டோரோலா, போட், பானாசோனிக், டிசிஎல் டெக்னாலஜீஸ், ஒன்பிளஸ் போன்ற பல்வேறு நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் உற்பத்தி சேவைகளை வழங்கி வருகிறது. இந்த புதிய ஆலை, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேலும் தூண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5,000 வேலைவாய்ப்புகள் என்பது, குறிப்பாக காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு புதிய வாழ்க்கை வாய்ப்புகளை உருவாக்கும். இது, கிராமப்புற இளைஞர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதோடு, அவர்களை தொழில்நுட்பத் துறையில் திறன் பெறச் செய்யும்.

தமிழ்நாடு அரசு, 2021 மே முதல் 895 ஒப்பந்தங்களின் மூலம் ரூ.10,14,368 கோடி முதலீட்டு உறுதிமொழிகளைப் பெற்று, 32 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. தமிழகத்தை 2030-க்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாறுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.

2024-25 ஆம் நிதியாண்டில், 9.69 சதவீத வளர்ச்சியை எட்டியதாக பொருளாதார ஆய்வு அறிக்கை கூறுகிறது. இது, கடந்த 10 ஆண்டுகளில் மிக உயர்ந்த வளர்ச்சியாகும். இதன் மூலம், இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்த நிலையில், தற்போது 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு என்பது, தமிழக அரசின் தொழில் ஊக்குவிப்பு முயற்சிகளுக்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது. இந்த ஆலை, உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதோடு, தமிழ்நாட்டை மின்னணு உற்பத்தியில் முன்னணி மாநிலமாக மாற்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

De/koeln fehlen bis 2029 fast 250 millionen euro fuer lindweiler und chorweiler ist das ein alarmsignal/ ) umso. Consent to service google ads. How does olympia softgel manufacturing differ from standard supplement factories ?.