இண்டிகோ ஸ்ட்ரைக் காரணமாக விமான கட்டணம் ராக்கெட் போல ஏற்றம்
இண்டிகோ வேலைநிறுத்தம் காரணமாக, விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்து பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இண்டிகோ விமான நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், நாடு முழுவதும் விமான சேவைகள் பாதிப்புக்குள்ளாகி, டிக்கெட் கட்டணங்கள் திடீரென அதிகரித்துள்ளன. இதன் தாக்கம் சென்னை உள்பட பல விமான நிலையங்களில் தென்பட்டு, பயணிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் விமான கட்டணம் வழக்கமாக ரூ.3,129 இருந்த நிலையில், தற்போது அது ரூ.20,599 வரை உயர்ந்துள்ளது. அதேபோல், சென்னையில் இருந்து திருச்சி செல்ல ரூ.3,129 இருந்த கட்டணம், ரூ.14,961 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை – திருவனந்தபுரம் வழித்தடத்திலும் கட்டண உயர்வு கடுமையாக பதிவாகியுள்ளது. ரூ.6,805 இருந்த கட்டணம் தற்போது ரூ.34,403 வரை உயர்ந்துள்ளது.
அதேபோன்று, சென்னையில் இருந்து மும்பை செல்லும் விமான கட்டணம் ரூ.5,980 இருந்து ரூ.42,448 வரை உயர்ந்துள்ளது. டெல்லி பயணக்கட்டணமும் ரூ.7,746 இருந்து ரூ.32,782 ஆக உயர்ந்துள்ளது.
விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்த நிலையில், அவசரப் பயணத்துக்குத் திட்டமிட்டிருந்த பயணிகள் சிரமத்தில் சிக்கியுள்ளனர்.
