வங்கு கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; புயலாக மாறுமா? – வெதர்மேன் கொடுத்தா அலர்ட்

New Project (1)

நாளை மறுநாள் உருவாக உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுக்கூடுமா என்பது குர்ரித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இம்மாத தொடக்கத்தில் சற்று மந்தமாக இருந்தாலும், கடந்த 3 நாட்களாக மாநிலம் முழுவதும் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில், வரும் 22-ஆம் தேதி இலங்கைக்கு அருகிலுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த அமைப்பு இன்னும் வலுப்பெறக்கூடும்! இதன் தாக்கத்தால் நாளை (21-11-2025) முதல் 24-ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் 4 நாட்கள் தொடர்ந்து பரவலான மழை பெய்யும் என வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.

மேலும், 24-ஆம் தேதி மற்றொரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளது. 22-ஆம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு புயலாக மாறுமா, அல்லது அடுத்து வரவிருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வளருமா என்பதை இப்போது சொல்ல முடியாது. இது பற்றிய தெளிவான விவரம் 26-ஆம் தேதிக்குப் பிறகே கிடைக்கும் என வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

earn money online with a steady, recurring income as your referred users stay active. Just a moment.... heavy equipment transport hampden ma.