விமானச் சேவைகளை இண்டிகோ அதிரடியாகக் குறைத்தது!

New Project (59)

விமானிகள் பற்றாக்குறை எதிரொலியாக இண்டிகோ நிறுவனம் லண்டன், மான்செஸ்டர் உள்ளிட்ட நகரங்களுக்கான சர்வதேச விமானச் சேவைகளை அதிரடியாகக் குறைப்பதாக அறிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான இண்டிகோ, நிலவி வரும் விமானிகள் பற்றாக்குறை காரணமாக தனது சர்வதேச விமான சேவைகளை அதிரடியாகக் குறைப்பதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் போதிய விமானிகள் இல்லாததால் நூற்றுக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சூழலைச் சமாளிக்க, வரும் நாட்களில் தனது சேவைகளைக் குறைத்துக் கொள்வதாக இந்திய விமானப் போக்குவரத்து இயக்குனரகத்திடம் இண்டிகோ ஏற்கனவே தெரிவித்திருந்தது.

அதன் ஒரு பகுதியாக, தற்போது தொலைத்தூர சர்வதேச வழித்தடங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை நிறுவனம் மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, டெல்லி – கோபன்ஹேகன் இடையேயான விமான சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், டெல்லி – லண்டன் மற்றும் டெல்லி – மான்செஸ்டர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கான விமான சேவைகளும் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன. நிறுவனத்தின் இந்த திடீர் முடிவால் சர்வதேசப் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Consent to service google ads. בצפון המדינה נסטיה חשפנית בבית שאן strip johnny. Yıldırım beyazıt mahallesi taksi | Çerkezköy 7/24 en yakın taksi.