77-வது குடியரசு தினம்: முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றார்!

New Project (2)

நாட்டின் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லி கடமைப்பாதையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றினார்.

நாட்டின் 77-வது குடியரசு தின விழா டெல்லி கடமைப்பாதையில் கோலாகலமாக நடைபெற்றது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைக்க, 21 குண்டுகள் முழங்க முப்படைகளின் கம்பீரமான அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.

இந்த அணிவகுப்பில் பிரசாந்த் ரக ஹெலிகாப்டர்கள் மலர் தூவ, பீஷ்மா & அர்ஜுன் பீரங்கிகள், ஆகாஷ் ஏவுகணை மற்றும் சூர்யஸ்திர ராக்கெட் லாஞ்சர்கள் இந்தியாவின் ராணுவ வலிமையை வெளிப்படுத்தின. ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட இவ்விழாவில், நவீன டிரோன்களின் அணிவகுப்பும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

earn money online with a steady, recurring income as your referred users stay active. Just a moment.... Hawaii car transport.