ஜூன் முதல் உயர்கிறது மொபைல் ரீசார்ஜ் கட்டணம்! – எவ்வளவு தெரியுமா?

New Project (32)

ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா பயனர்களுக்குப் பேரிடியாக, வரும் ஜூன் 2026 முதல் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் 15 % வரை உயரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல நிதி ஆய்வு நிறுவனமான ஜெஃப்ரீஸ் (Jefferies) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொலைத்தொடர்புத் துறையில் பெரிய அளவில் கட்டண மாற்றங்கள் செய்யப்படவில்லை. தற்போது நிறுவனங்களின் ஒரு பயனரிடமிருந்து கிடைக்கும் சராசரி வருவாயை (ARPU) உயர்த்தவும், 5ஜி உள்கட்டமைப்பு செலவுகளைச் சமாளிக்கவும் இந்த விலை உயர்வு அவசியமாகிறது.

ரிலையன்ஸ் ஜியோ: தனது கட்டணங்களை 10 முதல் 20 சதவீதம் வரை உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.

வோடபோன் ஐடியா (Vi): கடுமையான கடன் சுமையில் இருக்கும் இந்நிறுவனம், அரசுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையைச் சமாளிக்க 2027-30 காலகட்டத்திற்குள் ஒட்டுமொத்தமாக 45 சதவீதம் வரை கட்டணங்களை உயர்த்த வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

ஏர்டெல்: சந்தையில் தனது லாப வரம்பைத் தக்கவைக்க ஜியோவின் கட்டண உயர்வைப் பின்பற்றி விலையை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கட்டண உயர்வு அமலுக்கு வந்தால், 2027-ம் நிதியாண்டில் டெலிகாம் துறையின் வருவாய் வளர்ச்சி 16 % அதிகரிக்கும். ஆனால், சாமானிய மக்கள் தங்கள் மாதாந்திர ரீசார்ஜ் செலவிற்குப் கூடுதல் தொகையைச் செலவிட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவார்கள். குறிப்பாகப் போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கு மாறும் பயனர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

5ஜி சேவைகள் விரிவுபடுத்தப்பட்டு வரும் வேளையில், இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Consent to service google ads. באזור המרכז אליסה – בחורה מומלצת 100% תמונות אמיתיות נערות ליווי באשדוד strip johnny. Kızılpınar taksi arşivleri Çerkezköy taksi çağır 0533 664 26 77.