சென்னை டூ ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயில்: இனி 8 மணி நேரத்தில் ‘சல்லுன்னு’ போகலாம்!

New Project - 2026-01-08T112550.063

உலகப் புகழ்பெற்ற ஆன்மீக மற்றும் சுற்றுலாத் தலமாக விளங்கும் ராமேஸ்வரத்திற்குச் செல்லும் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்கும் வகையில், சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் இடையே அதிநவீன வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கத் தென்னக ரயில்வே விரிவான திட்டத்தை வகுத்துள்ளது. தற்போது சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் இரவு நேர ரயில்களாகவே இருப்பதால், பகல் நேர பயணத்திற்காக ஒரு விரைவு ரயில் வேண்டும் எனப் பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் விதமாக, சுமார் 8 மணி நேரத்தில் சென்னையைச் சென்றடையும் வகையில் இந்த வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகம் வருகை தரும்போது, இந்த புதிய ரயில் சேவையை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைப்பார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய வந்தே பாரத் ரயில் சேவையானது புதன்கிழமை தவிர வாரத்தின் 6 நாட்களும் இயக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான உத்தேச கால அட்டவணையின்படி, ராமேஸ்வரத்தில் இருந்து மதியம் 2:30 மணிக்குப் புறப்படும் ரயில், அன்று இரவு 10:20 மணிக்கே சென்னை எழும்பூர் நிலையத்தை அடைந்துவிடும். மறுமார்க்கமாக, சென்னையிலிருந்து காலை 5:30 மணிக்குப் புறப்பட்டு, மதியம் 1:15 மணிக்கெல்லாம் ராமேஸ்வரத்தைச் சென்றடையும் வகையில் பயண நேரம் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வரும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு, இந்த அதிவேக ரயில் சேவை ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும். சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரத்தில் இருந்து ஏற்கனவே இயக்கப்படும் மூன்று இரவு நேர ரயில்களுடன், இந்த பகல் நேர வந்தே பாரத் ரயிலும் இணைவதால் ராமேஸ்வரம் செல்லும் பயணிகளின் பயணம் இனி இன்னும் எளிமையாகவும் வசதியாகவும் மாறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

For websites and social media. Just a moment.... Hawaii car transport.