சோழர் வரலாறு பேசும் மண்! விழுப்புரத்தில் 1000 ஆண்டு பழமையான கல்வெட்டுகள் மற்றும் விநாயகர் சிலை கண்டெடுப்பு!

New Project - 2026-01-06T153743.050

விழுப்புரம் மாவட்டம், சோழர் காலத்தின் வரலாற்றுச் சான்றுகள் நிறைந்த ஒரு பூமியாக மீண்டும் ஒருமுறை தன்னை நிலைநிறுத்தியுள்ளது. விழுப்புரம் அருகே திருக்கோவிலூர் சாலையில் அமைந்துள்ள கல்பட்டு கிராமத்தில், வரலாற்று ஆய்வாளர்களான செங்குட்டுவன், பிடாகம் தமிழழகன் மற்றும் கல்லூரி மாணவர் சித்தார்த்தன் ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வின் போது, 1,000 ஆண்டுகள் பழமையான சோழர் காலத்துக் கல்வெட்டுகளும், அரிய வகை விநாயகர் சிற்பமும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தத் தொன்மையான கண்டுபிடிப்புகள் அப்பகுதி மக்களிடையேயும், வரலாற்று ஆர்வலர்களிடையேயும் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளன.

கல்பட்டு கிராமத்தில் உள்ள சனீஸ்வரர் கோயில் வளாகத்தில் ஆய்வு செய்தபோது, அங்கு கொட்டி வைக்கப்பட்டிருந்த கருங்கற்களில் இரண்டு கல்வெட்டுத் துண்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அதில் ஒரு கல்வெட்டில், முற்கால சோழர்களுக்கே உரிய அழகிய எழுத்து நடையில் ‘இது பந்மா ஹேஸ்வரருக்கு ரக்ஷை’ என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இது வழக்கமாகச் சிவாலயக் கல்வெட்டுகளின் இறுதியில் இடம்பெறும் பாதுகாப்பு வாசகம் என்பதால், இப்பகுதியில் கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான சிவாலயம் இருந்திருக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர் செங்குட்டுவன் தெரிவித்துள்ளார்.

மற்றொரு கல்வெட்டுத் துண்டில் ‘ராஜகேசரி வர்மருக்கு ஒடு நீக்கி விடுத்தார் இறை வீழ்த்’ என்ற வாசகம் காணப்படுகிறது. இதனை ஆய்வு செய்த மூத்த கல்வெட்டு ஆய்வாளர் கோ.விஜய வேணுகோபால், இது கி.பி. 11 அல்லது 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால சோழர் காலத்தைச் சேர்ந்தது என்றும், குறிப்பிட்ட நிலத்திற்கான வரி நீக்கம் செய்யப்பட்ட செய்தியை இது தாங்கி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், கல்பட்டு மாரியம்மன் கோயில் திடலில் பாதியளவு மண்ணில் புதைந்திருந்த பலகைக் கல்லால் ஆன பழமையான விநாயகர் சிற்பம், கிராம மக்களின் உதவியுடன் வெளியே எடுக்கப்பட்டது. இந்தத் தொடர் கண்டுபிடிப்புகள் சோழர் காலத்தில் இந்தப் பகுதி மிகச்சிறந்த நிர்வாக மற்றும் ஆன்மீக மையமாகத் திகழ்ந்ததை உறுதிப்படுத்துகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

אילונה – חיפה נערות ליווי בבית שאן strip johnny. Das teilte die stadt köln heute mit. 我們提供專業的 網絡工程 服務,包括設計、 佈線工程 和優化網絡,並提供網絡安全和監控服務,以確保您的網絡安全、穩定和高效運行。.