சென்னையில் அமைகிறது பிரம்மாண்ட ‘கடல்வழி மேம்பாலம்’

New Project - 2026-01-05T164454.093

சென்னை மாநகரின் அசுரத்தனமான போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், தமிழக அரசு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. மும்பையில் உள்ளதைப் போன்றே, சென்னையி்லும் ‘கடல்வழி மேம்பாலம்’ (Sea Link) அமைப்பதற்கான பணிகள் துவங்க உள்ளன. எண்ணூர் முதல் மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி வரை அமையவுள்ள இத்திட்டம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு முக்கிய மாவட்டங்களை இணைக்கும் ஒரு பொருளாதாரப் பாலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திட்டத்தின் சிறப்பம்சங்கள்:

மொத்த மதிப்பீடு: ரூ.27,600 கோடி.

தூரம்: எண்ணூர் முதல் பூஞ்சேரி வரை சுமார் 92 கி.மீ முதல் 133 கி.மீ வரை (பல்வேறு கட்டங்களாக).

வழித்தடம்: எண்ணூர், தச்சூர், தண்டலம், ஸ்ரீபெரும்புதூர், சிங்கபெருமாள்கோவில் வழியாக மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி வரை இச்சாலை அமையும்.

பெயர்: இத்திட்டத்திற்கு ‘ECR கடல்வழி மேம்பாலம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ஏன் இந்தத் திட்டம் அவசியம்? சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் தொழிற்சாலைகள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. இதனால், வேலைவாய்ப்பிற்காகப் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் மக்கள் சென்னையை நோக்கிப் படையெடுக்கின்றனர். இதனால் ஏற்படும் கடும் வாகன நெரிசலைச் சமாளிக்க, வெறும் புறவழிச்சாலைகள் (Bypass) மட்டும் போதுமானதாக இல்லை. எனவே, கடல் மார்க்கமாகப் போக்குவரத்தை மாற்றியமைப்பதே இதற்கான நிரந்தரத் தீர்வாக இருக்கும் எனக் கருதி இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்பம்: மும்பை மற்றும் வெளிநாடுகளில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட கடல்வழிப் பாலங்களின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் உருவாக்கப்பட உள்ளது. அதே சமயம், கடலோரச் சுற்றுச்சூழல் மற்றும் மீனவ மக்களின் வாழ்வாதாரம் எவ்விதத்திலும் பாதிக்காத வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காகக் கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் (CRZ) அனுமதி பெறும் பணிகள் மற்றும் சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்ய முதற்கட்டமாக ரூ.3.8 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத் திட்டம்: இந்தக் கடல்வழி மேம்பாலம் அமைவது மட்டுமின்றி, சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்குக் கடற்கரைச் சாலையை (ECR) நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மகாபலிபுரம் முதல் நாகப்பட்டினம் வரையிலும், அங்கிருந்து கன்னியாகுமரி வரையிலும் சாலைகள் அகலப்படுத்தப்படுவதால், தென் மாவட்டங்களிலிருந்து சென்னை வருவது இனி மிக எளிதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

??. Jian tat stainless co ltd. So, are smart homes making us safer or more vulnerable ? the answer isn’t black and white.