கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு 891 சிறப்பு பேருந்துகள்…

New Project - 2025-12-22T130600.238

தமிழகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் பள்ளிகளுக்கான அரையாண்டு விடுமுறை வரும் டிசம்பர் 24-ம் தேதி முதல் தொடங்குகிறது. இதையொட்டி, சென்னையில் தங்கிப் பணிபுரியும் லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளனர். பயணிகளின் வசதிக்காகவும், பேருந்து நிலையங்களில் ஏற்படக்கூடிய அதிகப்படியான கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 891 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகத் தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் பயணிகள் திண்டாடுவதைத் தவிர்க்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த அறிவிப்பின்படி, டிசம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக இந்தச் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதில் பெரும்பகுதியாக, கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கோவை மற்றும் சேலம் உள்ளிட்ட நகரங்களுக்கு 780 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல், கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி மற்றும் பெங்களூரு போன்ற இடங்களுக்கு 91 பேருந்துகளும், மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து 20 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. விடுமுறை முடிந்து பயணிகள் மீண்டும் சென்னை திரும்ப ஏதுவாக, டிசம்பர் 28 (ஞாயிறு) அன்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே சுமார் 40,000-க்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ள நிலையில், கடைசி நேர நெரிசலைத் தவிர்க்கப் பயணிகள் டிஎன்எஸ்டிசி (TNSTC) இணையதளம் அல்லது மொபைல் செயலி மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும், பேருந்து நிலையங்களில் பயணிகளுக்கு வழிகாட்டவும் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தப் புதிய அறிவிப்பு, பண்டிகைக் காலத்தில் சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

→ grow your audience effortlessly. Just a moment.... Heavy equipment transport hampden ma.