தமிழகத்தில் டிசம்பர் 25 முதல் மழைக்கு வாய்ப்பு!

New Project - 2025-12-22T103944.302

தமிழகத்தில் வரும் டிசம்பர் 25-ஆம் தேதி முதல் மீண்டும் மழை பொழிவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது பூமத்திய ரேகை பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதன் காரணமாக, வரும் 25-ஆம் தேதியன்று டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழையை எதிர்பார்க்கலாம். அதனைத் தொடர்ந்து, டிசம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் கடலோரத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழ பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இன்று முதல் டிசம்பர் 24-ஆம் தேதி வரை தமிழகத்தின் உள் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும், அதிகாலை வேளைகளில் பனிமூட்டம் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இன்று முதல் 25-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையானது வழக்கத்தை விட சுமார் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் என்பதால், தமிழகத்தின் பல இடங்களில் கடும் குளிர் நிலவ வாய்ப்புள்ளது. இந்த திடீர் வெப்பநிலை குறைவு மற்றும் பனிமூட்டம் காரணமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உரிய பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

→ grow your audience effortlessly. Just a moment.... Heavy equipment transport hampden ma.