பாம்பன் பாலத்தில்  பழைய வேஷ்டிகளை கடலில் வீசும் ஐயப்ப பக்தர்கள்!

New Project - 2025-12-16T155030.754

பாம்பன் கடலில் உள்ள சாலைப் பாலத்தில் நின்றவாறு ஐயப்ப பக்தர்கள் தங்கள் பழைய ஆடைகள் மற்றும் வேஷ்டிகளைத் தூக்கி எறிவதால், மீன்பிடி வலைகள் பாதிக்கப்பட்டுத் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பிரசித்தி பெற்ற புண்ணியத் தலமான இராமேஸ்வரத்திற்குச் செல்லும் பக்தர்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் பலர், கடலின் புனிதத்தைக் கருதி, பாம்பன் பாலத்தில் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு, தங்கள் விரதத்தின் அடையாளமாகப் பழைய வேஷ்டிகள், துண்டுகள் மற்றும் இதர துணிகளைச் சடங்கு என்ற பெயரில் கடலில் வீசுவது அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.

பக்தர்கள் வீசும் இந்தக் கழிவுத் துணிகள் கடலில் மிதந்து, அப்பகுதியில் மீன்பிடிக்கும் மீனவர்களின் வலைகளில் சிக்குகின்றன. துணிகள் சிக்குவதால் வலைகள் கிழிந்து சேதமடைவதுடன், மீன் பிடிப்பதிலும் தாமதம் ஏற்படுகிறது. இதனால் மீனவர்களுக்குப் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.

இது குறித்து அப்பகுதி மீனவர்கள் கூறுகையில், “ஏற்கனவே பாம்பன் பாலத்தில் மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக வலைகள் போடப்பட்டுள்ளன. அதையும் மீறி பக்தர்கள் துணிகளைக் கடலில் வீசுகிறார்கள். இந்தக் குப்பைகளால் மீன்கள் பிடிபடுவது குறைவதோடு, வலைகள் சேதமடைகின்றன. இது எங்கள் வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதிக்கிறது,” என்று வேதனை தெரிவித்தனர்.

மேலும், இவ்வாறு பிளாஸ்டிக் அல்லாத பொருட்களாக இருந்தாலும், அதிக அளவில் துணிகள் கடலில் வீசப்படுவதால் கடல் சூழலியல் பாதிக்கப்படும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.எனவே, பாம்பன் பாலத்தில் வாகனங்களை நிறுத்தி கடலில் பொருட்களை வீசுவதைத் தடுக்கவும், மீன்பிடித் தொழிலைப் பாதுகாக்க விரைந்து நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறைக்கு மீனவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

关于我们. 專業 it方案 ,提供全面的技術解決方案 | tech computer company. tech news today.