உலகக் கோப்பை குத்துச்சண்டையில் இந்தியா முதலிடம் – பிரதமர் வாழ்த்து!
உலகக் கோப்பை குத்துச்சண்டையில் இந்திய அணி முதலிடம் பிடித்ததையெட்டி பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை குத்துச்சண்டை (World Boxing Cup)போட்டியின் இறுதி சுற்று உத்தரபிரதேசம் நொய்டாவில் நடைபெற்றது. 38 நாடுகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் இதில் பங்கேற்றனர். ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளில் 10 எடைப்பிரிவுகளுக்கான போட்டிகள் நடைபெற்றன.
இந்திய அணி 9 தங்கப் பதக்கங்கள் உட்பட மொத்தம் 20 பதக்கங்களை வென்று, பதக்கப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. உஸ்பெகிஸ்தான் 4 தங்கங்களுடன் இரண்டாம் இடமும், இங்கிலாந்து 2 தங்கங்களுடன் மூன்றாம் இடமும் பெற்றன.
ஆஸ்திரேலியா, ஜப்பான், சீன தைபே, கஜகஸ்தான், போலந்து ஆகியவை தலா 1 தங்கம் கைப்பற்றின. இந்த வெற்றியை முன்னிட்டு, இந்திய வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். “எதிர்காலத்திலும் பல சாதனைகள் புரிந்து நாட்டிற்கு பெருமை சேர்க்கட்டும்,” என அவர் பதிவு செய்தார்.
