மாணவர் பாராட்டு விழா: “கட்சி பேனர்கள் வேண்டாம்” – தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தல்!

New Project (37)

மாமல்லபுரத்தில் நாளை நடைபெறும் மாணவர் பாராட்டு விழாவில், கட்சி பேனர்கள் இல்லாமல், மாணவர்களின் சாதனைகளை மட்டும் கொண்டாட தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பாராட்டும் விழா மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில், முதல்கட்ட விழா நாளை (மே 30, 2025) மாமல்லபுரத்தில் உள்ள 4 பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கட்சி விளம்பர பதாகைகள், பேனர்கள் வைக்க வேண்டாம் என தவெக தலைவர் மற்றும் நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பாராட்டு விழாவில், அரியலூர், ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், சிவகங்கை, சென்னை, திண்டுக்கல், திருவள்ளூர், தேனி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர், மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சட்டமன்ற தொகுதிகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் கௌரவிக்கப்படவுள்ளனர். தவெக தலைவர் விஜய், மாணவர்களுக்கு அவர்களது பெற்றோர்கள் முன்னிலையில் பாராட்டு சான்றிதழ்களையும், ஊக்கத்தொகையையும் வழங்க உள்ளார்.

விஜய்யின் இந்த அறிவுறுத்தல், நிகழ்ச்சியை கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு, மாணவர்களின் கல்வி சாதனைகளை மட்டும் முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அமைந்துள்ளதாக கருதப்படுகிறது. கடந்த இரு ஆண்டுகளாக, தவெக சார்பில் சிறந்த மாணவர்களை பாராட்டி, ஊக்கத்தொகை வழங்கும் பணியை விஜய் மேற்கொண்டு வருகிறார். இந்த ஆண்டு, தமிழ்நாட்டின் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களை நேரில் சந்தித்து கௌரவிக்கும் திட்டத்தை மூன்று கட்டங்களாக நடத்த தவெக முடிவு செய்துள்ளது.

இந்த முதல்கட்ட விழாவிற்கு, பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாணவர்கள் நிர்வாகிகள் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்படுகின்றனர். இந்நிகழ்ச்சி, கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவிப்பதோடு, இளைஞர்கள் மீது விஜய்யின் அக்கறையை பிரதிபலிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

茶?. wi fi 全覆蓋. Believe it or not, electric vehicles aren’t a new invention.