வருமான வரி தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம்!

New Project (29)

2024-25 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யும் காலக்கெடு செப்டம்பர் 15, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

முதலில் ஜூலை 31, 2025 உடன் முடிவடைய இருந்த இந்த அவகாசம், கூடுதலாக 45 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரி தாக்கல் செய்யும் கடைசி தேதி ஜூலை 31-லிருந்து செப்டம்பர் 15, 2025 ஆக மாற்றப்பட்டுள்ளது. இது வரி செலுத்துவோருக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.பல இடங்களில் தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் காரணமாக, வரி செலுத்துவோர் கோரிக்கை வைத்ததை அடுத்து இந்த நீட்டிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நீட்டிப்பு தனிநபர்கள், வணிகர்கள் மற்றும் சிறு நிறுவனங்களுக்கு பொருந்தும். ஆனால், தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் (Audit cases) இந்த அவகாசத்தை பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி தாக்கல் செய்ய செப்டம்பர் 15, 2025 வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது, வரி செலுத்துவோருக்கு பெரும் உதவியாக இருக்கும். வரி தாக்கல் செய்ய திட்டமிடுபவர்கள், இந்திய வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான incometaxindia.gov.in இல் மேலும் விவரங்களை பார்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Consent to service google ads. אווה – קריות והסביבה נערות ליווי בבית שאן strip johnny. Fatih mahallesi taksi | Çerkezköy 7/24 en yakın taksi.