தமிழகத்தில் ஜூலை முதல் மின்கட்டணம் உயர வாய்ப்பு… எவ்வளவு அதிகரிக்கும்?

EB meter

மிழகத்தில் வரும் ஜூலை 1 முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (TNERC) பரிந்துரையின்படி, இந்த உயர்வு வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு அமல்படுத்தப்படலாம். தமிழகத்தில் 3.3 கோடிக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை நிர்வகிக்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO), தொடர்ந்து நிதி இழப்பை சந்தித்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022-ல் மின் கட்டணம் 30 சதவீதத்துக்கு மேல் உயர்த்தப்பட்டது. மத்திய அரசின் உதய் மின் திட்டத்தின் கீழ், 2027 வரை ஆண்டுதோறும் ஜூலை மாதம் கட்டண உயர்வு அவசியம் என்பதால், 2023-ல் 2.18 சதவீதமும், 2024-ல் 4.83 சதவீதமும் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டு, ஏப்ரல் மாத பணவீக்க விகிதமான 3.16 சதவீதம் அல்லது 6 சதவீதம் ஆகியவற்றில் எது குறைவோ அது கட்டண உயர்வாக அமல்படுத்தப்பட வேண்டும் என்ற விதியின் அடிப்படையில், 3.16 சதவீத உயர்வு முன்மொழியப்பட்டுள்ளது.

மின்வாரியத்தின் நிதி இழப்பு ரூ.1.62 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதில், 75 சதவீதம் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கான கடனாக உள்ளது. தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்படுவதே இழப்புக்குக் காரணம் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மின் கட்டண உயர்வால் மின்வாரியம் இலாபத்தில் இயங்கும் என்பது மாயை. தனியார் மின்சார கொள்முதலை கட்டுப்படுத்தி, நிலுவையில் உள்ள மின் திட்டங்களை செயல்படுத்தினால் மட்டுமே இழப்பைக் குறைக்க முடியும். எனவே, இந்த உயர்வை தமிழக அரசு கைவிட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் மின்வாரிய அதிகாரிகள், “மின் கட்டண உயர்வு குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. உதய் திட்டத்தின் காரணமாக 2027 வரை ஆண்டுதோறும் உயர்வு கட்டாயம்” எனத் தெரிவித்துள்ளனர். மறுபுறம், மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி முடிவு எடுப்பார் எனவும், நுகர்வோருக்கு பாதிப்பு இல்லாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

தமிழகத்தில் நீர்மின், காற்றாலை, சூரிய ஒளி மூலம் மொத்தம் 26,303 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 45 சதவீதம் தனியார் நிறுவனங்களிடமிருந்து பெறப்படுகிறது. நிலுவையில் உள்ள எண்ணூர், உடன்குடி அனல்மின் திட்டங்களை விரைவுபடுத்தினால் உற்பத்தி செலவு குறையும் என வல்லுநர்கள் கருதுகின்றனர். மின் கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடையே அதிருப்தி நிலவும் சூழலில், இது தொடர்பாக அரசின் அடுத்தகட்ட அறிவிப்பு என்ன என்பதை அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

?். 我們提供專業的 網絡工程 服務,包括設計、 佈線工程 和優化網絡,並提供網絡安全和監控服務,以確保您的網絡安全、穩定和高效運行。. tech news today ».