ரஷ்யா எண்ணெய்க்கு எண்டு கார்டா?
அமெரிக்கா ரஷ்யாவின் எரிசக்தி ஏற்றுமதிக்கு விதித்துள்ள புதிய தடைகள், இந்திய எண்ணெய் சந்தையிலும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ரஷ்யாவின் கச்சா எண்ணெயை அதிகளவில் வாங்கிவந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance Industries) நிறுவனம், இந்த தடைகளுக்குப் பிறகு தனது இறக்குமதி அளவை கணிசமாகக் குறைத்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா தடைகள் – ரஷ்யா எண்ணெய் இறக்குமதிக்கு கட்டுப்பாடு – உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா பல கட்டமாகத் தடைகளை விதித்து வருகிறது. சமீபத்தில், ரஷ்ய எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்ட பல நிறுவனங்களுக்கு அமெரிக்கா நேரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் தாக்கம், குறைந்த விலைக்கு கிடைக்கும் ரஷ்ய crude oil மீது அதிகம் நம்பிக்கை வைத்த இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கும் பரவியுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் முடிவும் சப்ளை சேன் மாற்றமும் – ஜாம்நகர் ரிஃபைனரி மூலம் உலகின் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு மையங்களை நடத்தும் ரிலையன்ஸ், ரஷ்யாவிலிருந்து வாங்கும் crude oil அளவை தற்காலிகமாகக் குறைத்திருக்கிறது. மாற்று சந்தைகள் — மத்திய கிழக்கு, ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்கா — ஆகிய பகுதிகளில் இருந்து புதிய ஒப்பந்தங்களை அமைக்கும் முயற்சிகளும் தொடங்கப்பட்டுள்ளன.
சந்தை நிபுணர்கள் கூறுவது – ரஷ்ய எண்ணெய் குறைந்த விலையில் கிடைத்தது காரணமாக இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு பெரிய நன்மை இருந்தது,தடைகள் காரணமாக மீண்டும் உயர்ந்த விலையிலான எண்ணெயை வாங்க வேண்டிய நிலை உருவாகலாம்,குறுகிய காலத்தில் லாபத்தில் சிறிய மாற்றம் ஏற்படலாம்.
பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் பங்கு நடத்தை – இந்த சர்வதேச சூழ்நிலை காரணமாக ரிலையன்ஸ் பங்கு விலையில் சின்ன அளவிலான ஏற்றத் தாழ்வுகள் பதிவாகியுள்ளன. எனினும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் பல்துறை வணிக நிலைத்தன்மை காரணமாக நீண்ட காலத்தில் பெரிய தாக்கம் இல்லையென நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.
