வரி விதிப்பை அதிகரித்த டிரம்ப்… இந்தியா சமாளிக்கப் போவது எப்படி?

Modi - Trump

மெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க பொருட்கள் மீதான இந்தியாவின் இறக்குமதி வரிகளை கடுமையாக விமர்சித்துள்ளதோடு, பதிலுக்கும் தங்கள் நாடும் வரி விதிப்பைக் கடுமையாக்கும் என அறிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமையன்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, “இந்தியா நம்மிடம் மிக அதிகமான வரிகளை வசூலிக்கிறது. உங்களால் இந்தியாவில் எதனையும் விற்பனை செய்ய முடியாது. ஒருவழியாக அவர்கள் தங்களின் வரிகளை குறைக்க ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்கள் செய்ததை யாரோ ஒருவர் அம்பலப்படுத்தியதால் அவர்கள் தங்களின் வரிகளைக் குறைக்க விரும்புகிறார்கள்” என மிக கடுமையாக சாடினார்.

குறிப்பாக இந்தியாவின் கார் இறக்குமதி வரிகள் 100 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளதாக குற்றம் சாட்டி, அமெரிக்காவின் புதிய “பரஸ்பர வரி” (reciprocal tax) கொள்கையை அறிவித்தார். இது ஏப்ரல் 2 முதல் அமலுக்கு வருவதாகவும், இந்த கொள்கையின் மூலம், அமெரிக்கா மீது அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு, அதே அளவு வரிகளை அமெரிக்கா விதிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரி விதிப்பு அதிகரிக்கும் என்பதால், அது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.

இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், அமெரிக்க வர்த்தகத்துறை அமைச்சர் ஹோவார்ட் லுட்னிக் உடன் வர்த்தக பேச்சுவார்த்தைக்காக வாஷிங்டன் சென்றிருந்த நிலையில் டிரம்ப்பின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இந்தியா சமாளிப்பது எப்படி?

இந்த நிலையில், டிரம்பின் இந்த புதிய வரி விதிப்பு பிரச்னையை இந்தியா சமாளிப்பது எப்படி என்பது குறித்து நிபுணர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் இங்கே…

வரி கொள்கையில் மாற்றங்கள்

இந்தியா, அமெரிக்காவுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்த, தனது உயர்ந்த இறக்குமதி வரிகளை மறுபரிசீலனை செய்யலாம். இது இருநாட்டு பொருளாதார வளர்ச்சிக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

பரஸ்பர வர்த்தக ஒப்பந்தங்கள்

அமெரிக்காவுடன் பரஸ்பர வர்த்தக ஒப்பந்தங்களை உருவாக்குவதன் மூலம், இந்தியா தனது பொருளாதார நலன்களை பாதுகாக்க முடியும். இது இருநாடுகளுக்குமான வர்த்தக தடைகளை குறைத்து, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

உள்நாட்டு உற்பத்தி மற்றும் நுகர்வை ஊக்குவித்தல்

உள்நாட்டில் உற்பத்தி மற்றும் நுகர்வை அதிகரிப்பதன் மூலம், இந்தியா தனது பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும். இது வெளிநாட்டு பொருளாதார அழுத்தங்களை குறைக்கும்.

புதிய சந்தைகளை ஆராய்தல்

ஏற்றுமதிக்கு புதிய சந்தைகளை தேடுவதன் மூலம், இந்தியா தனது பொருளாதாரத்தை பலவீனப்படுத்தாமல் பாதுகாக்க முடியும். ஐரோப்பிய யூனியன், ஆசிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு போன்ற பகுதிகளில் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது முக்கியம்.

உலக வர்த்தக அமைப்பின் (WTO) மூலம் தீர்வு காணுதல்

இந்தியா, அமெரிக்காவின் வரி கொள்கைகளுக்கு எதிராக WTO மூலம் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளலாம். இது சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் தீர்வுகளைப் பெற உதவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

→ grow your audience effortlessly. Just a moment.... heavy equipment transport hampden ma.