வங்கக்கடலில் வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு பகுதி | வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மேலும் வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக (Well-marked Low Pressure Area) வலுப்பெற்றுள்ளது.
இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையை நோக்கி நகரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தென் மாநிலங்களில் மழைப்பொழிவுக்கான வாய்ப்புகள் குறித்து வானிலை ஆய்வு மையம் தீவிரமாக கண்காணித்து வருகிறது.
