மாமல்லபுரம், ராமேஸ்வரம், தஞ்சாவூர் உட்பட 23 ஆன்மிக சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த திட்டம்!

mamallapuram 1200

லகம் முழுவதிலுமிருந்து வரும் தமிழ்நாட்டுக்கு ஆன்மிக சுற்றுலாவுக்காக வரும் பயணிகள் கண்டு மனம் மகிழும் வகையில், மாநிலத்தில் 33,000 பழமையான கோயில்கள் உள்ளன. பெரும்பாலான கோவில்கள் சிவன், விஷ்ணு மற்றும் அவர்களது துணைவியார்களை போற்றும் வகையில் கட்டப்பட்டுள்ளன.

இந்த கோயில்கள், அவற்றின் வடிவமைப்பு மற்றும் சிற்பங்களால் மட்டுமல்ல, அவற்றின் வளாகத்தில் பக்தி, நடனம், பாடல், பூஜைகள், திருவிழாக்கள் மற்றும் விருந்துகள் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்கின்றன.

இது ஒருபுறமிருக்க, தமிழகத்திற்கு மேலும் அழகு சேர்த்தவர்கள் பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், நாயக்கர்கள் மற்றும் விஜயநகரம் போன்ற அந்நாள் ஆட்சியாளர்கள். கி.பி 700 ல், தமிழகத்தின் மிகச்சிறந்த பழமையான கோவில்களை செதுக்கிய சிறந்த ஆட்சியாளர்களில் பல்லவர்கள் முதன்மையானவர்கள்.
கற்களால் கோயில்களை செதுக்குவதில் அவர்கள் தேர்ந்த நிபுணர்களாக இருந்தனர்.

கி.பி.900க்குப் பிறகு ஆட்சி செய்த சோழர்களின் காலம், கோபுரங்கள், மண்டபங்கள் அமைத்து அழகுபடுத்த வேண்டும் என்பதே அவர்களின் கோயில்களின் எண்ணமாக இருந்தது. விஜயநகரம் மற்றும் நாயக்கர்கள் பாணி, சன்னதிக்கு அருகில் நுழைவாயில் வளைவுகள், பிரமாண்டமான தூண்கள் மற்றும் வளைந்த பாதைகள் ஆகியவற்றின் மூலம் கலை முன்னோக்கி கொண்டு வந்தனர்.

தமிழகத்தின் பிரபல யாத்திரை தலங்கள்

அந்த வகையில், மயிலை கபாலீஸ்வரர், சிதம்பரம் நடராஜர்; மீனாட்சி கோவில், மதுரை; ராமேஸ்வரம் கோவில்; பிரகதீஸ்வரர் கோவில், தஞ்சாவூர்; கும்பகோணம்; மாரியம்மன் கோவில், சமயபுரம்; வேளாங்கண்ணி; நாகூர் தர்கா; திருச்செந்தூர் முருகன் கோவில்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்; பழனி; பாபநாசம்; ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி கோவில், சங்கரன்கோவில்; அருணாச்சல கோவில், திருவண்ணாமலை மற்றும் குமரியம்மன் கோவில், கன்னியாகுமரி ஆகியவை தமிழ்நாட்டின் பிரபலமான யாத்திரை தலங்களாக விளங்குகின்றன.

மத வழிபாட்டுத் தலங்களுக்கான யாத்திரை தமிழ்நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உள்ளூர்வாசிகளுக்கு மகத்தான பொருளாதார ஆதாயங்களையும் ஏற்படுத்தி தருகிறது.

இதனை கருத்தில்கொண்டு, மாநிலம் முழுவதும் உள்ள பிரபலமான கோயில்கள் மற்றும் மதத் தலங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவது குறித்து விவாதிக்க, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர். ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில், அவ்விரு துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

23 ஆன்மிக சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த முடிவு

ஆலோசனை முடிவில், திருவொற்றியூர், மயிலாப்பூர், திருவான்மியூர், காஞ்சிபுரம், மாமல்லபுரம், ராமேஸ்வரம், தஞ்சாவூர், திருநெல்வேலி, பாபநாசம், பர்வதமலை, சங்கரன்கோவில், சதுரகிரி மற்றும் வேலூர் உள்ளிட்ட 23 ஆன்மிக சுற்றுலா இடங்களில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. குறிப்பாக அடையாளம் காணப்பட்டுள்ள இந்த 23 கோயில்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்களில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம்

பயணிகளின் உடைமைகளைப் பாதுகாக்கும் அறைகள், காத்திருப்பு அறைகள், குடிநீர் மற்றும் கழிப்பறைகள் போன்ற வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த வளாகத்தை நிர்மாணிப்பதற்கான திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இது தவிர, கோயில்களிலும் அதைச் சுற்றியுள்ள வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் கோயில்களுக்கு அருகில் உள்ள நீர்நிலைகள் மற்றும் பூங்காக்களை புதுப்பித்தல் போன்ற கூடுதல் வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

→ grow your audience effortlessly. Just a moment.... Hawaii car transport.