மே மாதத்தில் அக்னி வெயில் தாக்கம் இருக்காது… காரணம் இது தான்!

Chennai rain 1200

மிழகத்தில் வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை, இந்த ஆண்டு முன்கூட்டியே மே மாதத்தில் தொடங்க உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மே 13 ஆம் தேதியே அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் உள்ளது. இதனால், தமிழகத்தில் மே மாத இறுதியிலேயே பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாகவும், ஜூன் மாதம் மழை தீவிரமடையும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை, இந்தியாவின் மிக முக்கியமான மழைக்காலமாகும். இது நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கான மழைப்பொழிவை வழங்குகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு மழை அளவு 104% ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பருவமழை முன்கூட்டியே தொடங்குவதால், மே மாதத்தில் அக்னி நட்சத்திரத்தினால் ஏற்படும் வெப்பத்தின் தாக்கம் கணிசமாகக் குறையும் என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது, மக்களுக்கு வெயிலின் கடுமையிலிருந்து நிவாரணம் அளிக்கும் ஆறுதல் தகவலாக அமைந்துள்ளது.

முன்கூட்டியே பருவமழை தொடங்குவதால், தமிழகத்தில் விவசாயம் மற்றும் நீர் மேலாண்மைக்கு பெரும் பயன் கிடைக்கும். காவிரி படுகையில், குறிப்பாக டெல்டா பாசன பகுதிகளில் விவசாயம் செய்யும் விவசாயிகள், இதனால் நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டியிருக்காது.

இருப்பினும், முன்கூட்டிய மழைப்பொழிவு வெள்ளம் மற்றும் பிற பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்பதால், அரசு மற்றும் உள்ளூர் நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மழைக்காலத்திற்கு முன்னதாக வடிகால் அமைப்புகளை சரிசெய்வது, மழைநீர் சேகரிப்பு முறைகளை மேம்படுத்துவது போன்ற பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

灵?. 專業 it方案 ,提供全面的技術解決方案 | tech computer company. tech news today.